காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

 

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் 28.05.2023 அன்று தொடங்கி 09.06.2023 வரை 13 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதில் 02.06.2023 அன்று கருடசேவை திருவிழாவும், 06.06.2023 அன்று திருத்தேர் உற்சவமும் 08.06.2023 அன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 4.00,000 நாலுலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என தெரியவருகிறது.

இத்திருவிழா சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடு குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் திருமதி.கலைச்செல்வி மோகன் IAS அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல்நிலைய ஆய்வாளர்கள் (சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து), இந்து சமய அறநிலைத்துறை, கோயில் நிர்வாகிகள், மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாராத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருடசேவை மற்றும் திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் ஓயர்களில் மின்விபத்து ஏற்படாவண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டடது.

மேலும் இத்திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள். காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 1500 காவல்துறையினருடன் ஊர்க்காவல்படையினர். NCC/NSS மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுசம்மந்தமாக பொதுமக்கள் கவனத்திற்கு

இத்திருவிழா நாட்களில் குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை அழைத்துச்செல்பவர்கள் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் தேர்செல்லும் முக்கிய வீதிகளில் குடிநீர் தொட்டிகள். நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றச்செயல்களை தடுக்கும்பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாச வேலைகளில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதிபெற்ற பின்னரே அன்னதானம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மேற்படி அன்னதானம் வழங்கும் இடங்களில் மட்டுமே அன்னதானம் பெற கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருவிழா காலங்களில் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்கள்
மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளை தூய்மையாக வைத்துக்கொள்ளும் பொருட்டு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை பயன்படுத்த பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

- Advertisement -

திருவிழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் மாற்றுவழித்தடங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மருத்துவத் குழு சார்பில் திருவிழா காலங்களில் திருத்தேர் மற்றும் சாமிஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள முக்கிய
சந்திப்புகளில் பந்தல் அமைத்து மருத்துவமுகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கருடசேவை(02.06.2023) மற்றும் திருத்தேர்(06.06.2023) வீதிஉலா நடைபெறும் நாட்களில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் தற்காலிக பேருந்துநிலையம்
வரை வந்துசெல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

சென்னை,
பூந்தமல்லி மார்க்கம் -புதிய இரயில்நிலையம்

வேலூர், திருத்தணி, திருப்பதி மார்க்கம்- ஒலிமுகமதுப்பேட்டை சந்திப்பு

தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கம் – பழைய இரயில்நிலையம்

உத்திரமேரூர்,கீழ்ரோடு மார்க்கம் -ஓரிக்கை சந்திப்பு (மிலிட்டரிரோடு

திருச்சி, விழுப்புரம், செய்யாறு மார்க்கம் -செவிலிமேடு சந்திப்பு

இத்திருவிழா நாட்களில் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திருவிழா நல்ல முறையில் நடைபெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படு கிறது.

சிறப்புநிருபர் ம.சசி

Leave A Reply

Your email address will not be published.