ஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடி நாட்டுசக்கரைக்கு புவிசார் குறியீடு.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர் சங்கம் சார்பில், கவுந்தப்பாடி நாட்டுச்சக்கரைக்கு புவிசார் குறியீடு பெற்று தந்ததற்கு, அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், மத்திய மாநில அரசு அலுவலர்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆகியோருக்கு நன்றி பாராட்டு விழா, டிஜிட்டல் புத்தக வெளியீடு விழா நிகழ்வு, கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கவுந்தப்பாடி சர்க்கரை மார்க்கெட் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்… விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, ஈரோடு கிரீன் பவுண்டேஷன் சார்பில், மரக் கன்றுகள், கரும்புகள் இலவசமாக வழங்கப்பட்டன… சங்கம் சார்பில் தேனீர், காரம், ஸ்வீட் ஆகியன வழங்கப்பட்டன. ஈரோடு
கவுந்தப்பாடியில் இருந்து, போலீஸ் பார்வை செய்திகளுக்காக… Jc. கவுந்தி கண்ணன்…

