கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்றவன் கைது காவல்துறையினர் அதிரடி.

கோவை மாவட்டம்சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்றவன்கைது காவல்துறையினர்அதிரடி.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், IPS. அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதன் அடிப்படையில் (18.02.2025) பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் சூலூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்காக வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைலோச்சன் பிஸ்வால் மகன் சத்யபிரதா பிஸ்வால்(34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 2 கிலோ 250 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.