ஆற்றில்குதித்து தற்கொலைக்கு முயன்றபெண்ணை மீட்ட இன்ஸ்பெக்டர் மாரியப்பன்-காவல் குழுவினர் DGP.சங்கர்ஜிவால் IPS.பாராட்டு.
ஆற்றில்குதித்து தற்கொலைக்குமுயன்றபெண்ணை மீட்ட இன்ஸ்பெக்டர் மாரியப்பன்காவல்குழுவினர் DGP.சங்கர்ஜிவால் IPS.பாராட்டு.

தூத்துக்குடிமாவட்டம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் (23.01.2025) ஆத்தூர் பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்று ஆற்றில் குதித்துள்ளார். இதனை அறிந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் அவர்கள் உடனடியாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பாலத்தில் கயிறு கட்டி அவரும் ஆற்றில் குதித்த பெண்மணியை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாமல்காவல் ஆய்வாளரின் வீர தீர செயலுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP. திரு. ஆல்பர்ட் ஜான் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மேலும் (23.01.2025) மாலை ஆத்தூர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன் அவர்கள் உடனடியாக தனது உயிரை பணயம் வைத்து காவலர்கள் திரு. முனியசாமி மற்றும் திரு. விக்னேஷ் ஆகியோரின் உதவியுடன் கயிறு கட்டி காவல் ஆய்வாளரும் ஆற்றில் குதித்து அப்பெண்ணை பத்திரமாக மீட்ட வீரதீர செயலை பாராட்டும் விதமாக (24.01.2025) தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்.DGP. திரு. சங்கர்ஜிவால் IPS அவர்கள், காவல் ஆய்வாளர் திரு. மாரியப்பன் மற்றும் காவலர்கள் திரு. முனியசாமி, திரு. விக்னேஷ் ஆகியோரை சென்னை காவல்துறை தலைமையகத்தில் வைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
நிருபர்.ராமசாமி.


