திருப்பரங்குன்றம்மலையில் ஆடுகோழிஅறுத்து சமபந்தி விருந்துக்கு இஸ்லாமியர்கள் முயற்சி போலீஸார் தடுத்ததால் பரபரப்பு

திருப்பரங்குன்றம்மலையில் ஆடுகோழிஅறுத்து சமபந்தி விருந்துக்கு இஸ்லாமியர்கள் முயற்சி போலீஸார் தடுத்ததால் பரபரப்பு.

மதுரை, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து, முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி சமபந்தி விருந்து கொடுக்க தடையை மீறி வந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்கள் பிறகு கலைந்து சென்றனர்.

- Advertisement -

சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி ஆடு, கோழி அறுத்து சமபந்தி விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்து இருந்தன. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனால், மலை மீது யாரும் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்நிலையில், சமபந்தி விருந்து கொடுக்க இஸ்லாமியர்கள் தடையை மீறி ஆட்டுடன் வந்தனர். அவர்களை மலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.இதனைத் தொடர்ந்து மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்போவதாக ஹிந்து முன்னணி அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமைநிருபர்.மு.பாண்டியராஜன்.

Leave A Reply

Your email address will not be published.