கொடைக்கானலில் மான் வேட்டையாடி சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்ட ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர் .
கொடைக்கானலில் மான் வேட்டையாடி சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்ட ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெரும்பாலான இடங்கள் வனப் பகுதியாகவே இருந்து வருகிறது . இங்கு மான், காட்டெருமை, சிறுத்தை, புலி ,உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் இருந்து வருகிறது . தொடர்ந்து இந்த வன விலங்குகள் நகர் பகுதி மட்டுமின்றி நகர் பகுதியில் ஒட்டி உள்ள இடங்களிலும் உலா வருகிறது . இந்த நிலையில் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் தனியார் தோட்டத்தில் இருந்த சிலர் மான் வேட்டையாடி அதனை சமைப்பதற்காக தயார் செய்து வந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர் .
தொடர்ந்து இந்த புகைப்படம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மான் இறைச்சி , மற்றும் சமைத்த மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார் , ராஜேஷ் கண்ணன் , அஜித் , சிவராமன் , ராமகிருஷ்ணன் , பிரவீன் ஆகிய ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர் .
மேலும் வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் டிராக்டர் மற்றும் அருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் பல்வேறு வேட்டை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை தீவிர படுத்தி உள்ளனர் .
நிருபர் R.குப்புசாமி


