திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் விலைஉயர்ந்த பைக் திருடிய திருட்டு கும்பல் கைது ஆய்வாளர் திருவனந்தம் காவல் குழுவினர் அதிரடி

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் விலைஉயர்ந்த பைக் திருடிய திருட்டு கும்பல் கைது ஆய்வாளர் திருவனந்தம் காவல்குழுவினர் அதிரடி.

திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் அம்மாக்குளம் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் பரத் குமார் (வயது 20). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புடைய ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கி உள்ளார்.இந்த மோட்டார் சைக்கிளை பரத்குமார் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மர்ம நபர்கள் இரவு அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.

 

இதையடுத்து பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தேடினார்.பின்னர் இது குறித்து அரியமங்கலம் காவல்நிலையத்தில்புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் அரியமங்கலம் காவல் ஆய்வாவளர் திரு.திருவனந்நம் தலைமையிலான காவல்குழுவினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து விசாரித்தபோது, அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் ராஜ்(22), திருச்சி பாலக்கரை கூனி பஜாரைச் சேர்ந்த மேகராஜ்(31), அரியமங்கலம் நேருஜி நகரைச் சேர்ந்த ஹரி பிரசாத் ஆகியோர் அந்த மோட்டார் சைக்கிளின் லாக்கை உடைத்து திருடியது தெரியவந்தது.

- Advertisement -

பின்னர் போலீசார்3, பேரையும் கைது செய்து பைக்கைபறிமுதல்செய்து வழக்குபதிவுசெய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த மேகராஜ் மனைவி எலிசபெத் மற்றும் அவரது உறவினர்கள் 5,பேர் அரியமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மேகராஜை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு செல்போன் டெம்பர் கிளாஸால் கைகளை கிழித்துக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அரியமங்கலம் போலீசார் மேகராஜ் மனைவி எலிசபெத் (28), உறவினரான லாரன்ஸ் (19), திருச்சி பெரிய மிளகு பாறை சேர்ந்த மைக்கேல் (23), ஆதாம் (23 ), அறிவழகன் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.பின்னர் மோட்டார் சைக்கிள் திருடர்கள் மூன்று பேரையும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விடாமல் தடுத்து போராட்டம் நடத்திய பெண் உட்பட 5 பேரையும் வழக்குபதிவுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறப்புநிருபர்.மு.பாண்டியராஜன்

Leave A Reply

Your email address will not be published.