தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டியில்தமிழக வீரர் வீராங்கனைகள் முதலிடம் திருச்சியில் உற்சாக வரவேற்பு

தேசியஅளவிலான10 வது ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் தமிழக வீரர் வீராங்கனைகள் தங்க கோப்பையை வென்று முதலிடம் திருச்சியில் உற்சாக வரவேற்பு


தேசியஅளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில்
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டிமகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால்,
1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங் ஹர்டில்ஸ் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் இருந்து 10,14,18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் பிரிவினர் மற்றும் சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவினர் என 90 க்கும் அதிகமான ஸ்கேடிங் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இதில் பாண்டிச்சேரி, அந்தமான், மகாராஷ்டிரா, ஹரியானா, ஆந்திர பிரதேசம் என பத்துக்கும் அதிகமான மாநிலங்களில் இருந்து 500 க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்து தங்க கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

பின்னர் தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் வீரர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த சாதனையை நிகழ்த்தியதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு ஏரோ
ஸ்கேட்டோபால் சங்க தலைவர் ராகேஷ் சுப்ரமணியன்,செயலாளர் பிரவீன் ஜான்சன், பொருளாளர் தங்கமுருகன் மற்றும் பயிற்சியாளர்கள் அமல் ஜோயல், வினோத் ஆகியோரை வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.

விழாவில் தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் கூறும் போது, ஏரோஸ் கேட்டோபால் போட்டிக்கு திருச்சியில் ஒரு மைதானம் அமைத்தால் சர்வதேச அளவில் தமிழக வீரர்கள் ஜொலிப்பார்கள். அதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தலைமைநிருபர்.S.வேல்முருகன்.

Leave A Reply

Your email address will not be published.