திண்டுக்கல் மாவட்டகாவல்துறை ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு SP.V.பாஸ்கரன் தலைம.

திண்டுக்கல் மாவட்டகாவல்துறை ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு SP.V.பாஸ்கரன் தலைம.

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (30.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் “ஊழல் தடுப்பு உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

ஊழல் தடுப்பு உறுதிமொழி
நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன்.

- Advertisement -

அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.எனவே, நான்
அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும்,

இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும்

அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படுத்தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும்

பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும்
தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும்
ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

நிருபர்.P.சதீஷ்.

Leave A Reply

Your email address will not be published.