இராணிபேட்டை காவல்துறையினருக்கு மனஅழுத்தம் நீங்க தியானபயிற்சி முகாம் SP.DV.கிரண்ஸ்ருதி IPS அறிவுரை.

இராணிபேட்டை காவல்துறையினருக்கு மனஅழுத்தம் நீங்க தியானபயிற்சி முகாம் SP.DV.கிரண்ஸ்ருதி IPS அறிவுரை.

இராணிப்பேட்டை காவல் அதிகாரிகளுக்கும் ஆளினர்களுக்கும் மனஅழுத்தம் நீங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DV.கிரண்ஸ்ருதி IPS அவர்கள் தலைமையில் தியான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

- Advertisement -

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் Heartfullness தியான பயிற்சி அமைப்பு மூலம் காவல் அதிகாரிகள் காவல் ஆளினர்களுக்கு தியான பயிற்சி மற்றும் ஓய்வுநிலை பயிற்சி,
அளிக்கப்பட்டது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி IPS., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த தியானபயிற்சி வகுப்பில் Heartfulness தியான அமைப்பினர் மூலம்
காவல்துறை அதிகாரிகளுக்கு அன்றாட மன அழுத்தம் போக்கும் வகையிலும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து நேர்மறை எண்ணங்களாக மாற்றும் வழிமுறைகளும், அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
காவல்துறையினரும் நாள்தோறும் இதை கடைப்பிடித்தால் நல்ல ஆரோக்கியத்துடன் மனஅழுத்தம் நீங்கி மனநிம்மதியாக இருக்கலாம் என்பதை தெரிந்து கொண்டனர்.

இந்த தியான பயிற்சி வகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.திருமால்(இராணிப்பேட்டை உட்கோட்டம்) திரு.ரமேஷ் ராஜ் (DCB), திரு.ராமச்சந்திரன் (DCRB),மாநில Heartfullness ஒருங்கிணைப்பாளர் S.பிரகாஷ் , வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் N.லட்சுமி நாராயணன்,இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.M சங்கர் மற்றும் மாவட்ட பயிற்சியாளர் மற்றும் காவல்ஆளினர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.AR.முருகேசன்.

Leave A Reply

Your email address will not be published.