சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு”

சேலம் மாநகர காவல் துறை சார்பில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கு”காவல் ஆணையர் .P.விஜயகுமாரி IPS  துவக்கிவைத்து சிறப்புரை

16.10.2023 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கிரிப்டோ கரன்சி குறித்த கருத்தரங்கம் சோனா கல்லூரியில் சேலம் மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கை சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.P.விஜயகுமாரி IPS அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்கள்.

- Advertisement -

இக்கருத்தரங்கில் சென்னையை சேர்ந்த ஜியோடஸ் நிறுவனர் திரு.விக்ரம் சுப்புராஜ் மற்றும் ஸ்ரீநாத் நாயர் (ஜியோடஸ்) ஆகியோர் கலந்துகொண்டு காவல் அதிகாரிகளுக்கு கிரிப்டோ கரன்சி குறித்த சிறப்பு பயிற்சி கொடுத்தார்கள். கிரிப்டோ கரன்சி அடிப்படையிலான மோசடிகளை குறைக்கவும், கிரிப்டோ கரன்சி மோசடி வழக்குகளில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், தொழில் நுட்ப சிக்கல்களை புரிந்து கொள்ளவும், திறமையான புலனாய்வு குழுவை உருவாக்குதல் போன்றவைகள் குறித்தும் இப்பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில், சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் திரு.கெளதம்கோயல் IPS (வடக்கு), திரு.N.மதிவாணன் (தெற்கு) அவர்களும் கலந்து கொண்டார்கள்.

தலைமை நிருபர்.P.ஜெகதீஷ்

Leave A Reply

Your email address will not be published.