திருநெல்வேலி காவல்துறைசார்பாக மாணவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறைசார்பாக மாணவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி, முக்கிய பகுதிகளுக்கு சென்று மாவட்ட காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP.திரு. N.சிலம்பரசன்., அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், வீடுகளில் திருட்டு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக செய்ய வேண்டியது குறித்தும், சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய சைபர் கிரைம் காவல்துறையினரின் 1930, எண் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானபாலியல் குற்றங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 1098, மற்றும் 181, எங்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

நிருபர்.ஆறுமுகச்சாமி.

Leave A Reply

Your email address will not be published.