புளியங்குடி அருகே சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த விவசா யிக்கு போலீசார் பாராட்டு

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சாலையில் கிடந்த ரூ.5 லட்சத்தை மீட்டு ஒப்படைத்த விவசாயிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

நகைகடன் செலுத்த செல்லும் வழியில் பணத்தை தவற விட்ட வியாபாரியிடம் பணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன். புதுக்குடி கற்பகவீதி 1வது தெருவைச் சேர்ந்தவர் தங்கச்சாமி (50), விவசாயி. இவர் தனது மனைவி ஜோதியுடன் விவசாய பணிக்காக டிஎன்.புதுக்குடி மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப் போது சாலையில் மஞ்சள் நிற பை கேட்பாரற்ற நிலை யில் கிடப்பதை பார்த்தார்.

- Advertisement -

பையை எடுத்து பார்த்த போது அதில் ரூ.5 லட்சம் நோட்டு கட்டாக இருப் பதை கண்டார். இதனை தவற விட்ட நபர் யாரோ? அவர் எப்படி பணத்தை தொலைத்து விட்டு தவித்து இருப்பார் என்று எண் ணிய அவர் அவற்றை உரியவரிடம் ஒப்படைக் கும் நோக்கில் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்து உரியவர் யார் என விசாரித்துள்ளார்.

ஆனால் தவறவிட்டநபர் யார் என்பது உடனடியாக தெரியாத நிலையில் ரூ.5 லட்சம் வைக்கப்பட் டிருந்த மஞ்சள் பையை புளியங்குடி காவல் நிலை யத்திற்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தரிடம் ஒப்படைத்தார்.

விவசாயி தங்கச்சாமி யின் நேர்மையை இன்ஸ் பெக்டர் ஷியாம் சுந்தர் பாராட்டினார். அப்போது ரூ.5 லட்சத்தை சாலையில் தவறவிட்ட நபர், புளியங் குடி காவல் நிலையத்திற்கு வந்தார்.
விசாரணையில் அவர் புளியங்குடி நாட்டாமை அருணாசலம் விநாயகர் கோயில் தெருவைச்சேர்ந்த மளிகை கடைக்காரர் பால முருகன் (44) என்பதும், அவர் தனது நகைகளை வங்கியில் அடமானம்வைத்திருப்பதும் அதனை மீட்பதற்காக பையில் ரூ.5 லட்சத்துடன் பைக்கில் வங்கிக்கு சென்ற போது பை சாலையில் தவறி விழுந்திருப்பது தெரியவந்தது இதையடுத்து பாலமுருக னிடம் ரூ.5 லட்சம் ஒப்ப டைக்கப்பட்டது.
சாலையில் கண்டெடுத்த ரூ.5 லட்சத்திற்கு ஆசைப்படாமல் அதனை உரியவரிடம் ஒப்படைத்த தங்கச்சாமி மற்றும் அவரது மனைவியின் நேர்மையை பாராட்டி இன்ஸ்பெக்டர் சால்வை அணிவித்தார்.

இதுபோல் பாலமுருகனும், விவசாயி தங்கச்சாமி யின் நேர்மையை பாராட்டி பழங்கள் வழங்கி நன்றி தெரிவித்தார். அப்போது SI .மாடசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

நிருபர்.அருணாச்சலம்

Leave A Reply

Your email address will not be published.