திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக ஜூன்- 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக
ஜூன்- 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி IPS, அவர்கள் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் காவல் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாநகர காவல் அதிகாரிகள் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியாக,
மாணவ, மாணவியர்களுக்கு போதை பொருட்கள் உபயோகபடுத்துவதால் உடல்நலம் பாதித்து முளைசெயலிழந்து நோயுற்றுவாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி மற்றும் நிகழ்ச்சி நடத்தி திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக உறுதிமொழி ஏற்க செய்தார்கள்.
நிருபர்.R.ஜோதிபாசு.