கோவை மாவட்டம் காவல்துறை சார்பாக மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க SP.பத்ரிநாராயணன் IPS தலைமையில் கொடிஅணிவகுப்பு.

கோவை மாவட்டம் காவல்துறை சார்பாக மக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க.SP.பத்ரிநாராயணன் IPS.தலைமையில் கொடிஅணிவகுப்பு.

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

- Advertisement -

கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024, பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்,IPS அவர்களின் தலைமையில் (25.03.2024)* சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என‌ சுமார் 200, நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.