திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின விழா
திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச யோகா தின விழா கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதி
பாபு தலைமை வகித்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தடாசனம், அர்த்தகடி சக்ராசனம், பாதஹஸ்தாசனம், திரிகோண ஆசனம், பரிவ்ர்த்த திரிகோண ஆசனம், உட்கட்டாசனம், புஜங்காசனம், சலபாசனம், பஸ்திமோத்தாசனம், ஹலாசனம், சாந்தி ஆசனம் என பல்வேறு ஆசன பயிற்சிகளை அளித்து பேசுகையில்,
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சர்வதேச யோகா தினம் முன்வரைவு ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது .
ஜீன் 21 ஆம் தேதி வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள் ஆகும். யோக பயிற்சி உடல் நலத்திற்கு மன வளத்திற்கு வழிவகுக்கும் என்றார். நிகழ்வில் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் பங்கேற்றனர்.மேலும், வழக்கறிஞர் சங்கதுணைத்தலைவர் ,செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
சிறப்புநிருபர் .மு.பாண்டியராஜன்