திண்டுக்கல் CCTV கேமரா கட்டுபாட்டுஅறை SP.A.பிரதீப் IPS துவக்கிவைத்தார்

திண்டுக்கல் CCTV கேமராகட்டுபாட்டுஅறை SP.A.பிரதீப் IPS துவக்கிவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் A.பிரதீப் IPS, அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது.

- Advertisement -

இதில் நகர் பகுதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து நடைமுறைகள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தெய்வம் அவர்கள், நகர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.சிபின். IPS, அவர்கள், ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிபி சாய் சௌந்தர்யன் அவர்கள், திண்டுக்கல் நகர் போக்குவரத்து ஆய்வாளர் திரு.பழனிச்சாமி அவர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிருபர்.குருசரவணன்.

Leave A Reply

Your email address will not be published.