திண்டுக்கல்,மாவட்டம்17,வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை.
கொவிளாம்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை, ரூ.1,60,000 அபராதம்
திண்டுக்கல்,மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த சித்தையன்கோட்டை பகுதியை சேர்ந்த நரசிம்மன்(22) என்பவரை விளாம்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நிலக்கோட்டை DSP.திரு. செந்தில்குமார் அவர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், நரசிம்மனுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,60,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
சிறப்பு நிருபர்.குருசரவணன்.