ஆன்லைன் மூலம் வேலைவாய்பு தருவதாக பணமோசடி பணத்தை மீட்டுகொடுத்த கோவைமாவட்ட காவல்துறை.

ஆன்லைன் மூலம் வேலைவாய்பு தருவதாக பணமோசடி பணத்தை மீட்டுகொடுத்த கோவைமாவட்ட காவல்துறை.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கவியரசு மற்றும் வடவள்ளி பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர்கள் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp) வந்த குறுஞ்செய்தியை நம்பி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற Telegram ID link-னுள் சென்ற பொழுது சிறிய Task-கள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகை முதலீடாக பெற்றுள்ளனர்.

- Advertisement -

பின்னர் இதனை உண்மை என நம்பியவர்கள் மேலும் முதலீடு செய்து Task-யில் செல்வதற்காக பல பரிவர்த்தனைகள் மூலம் கவியரசு ரூ.3,74,400/– பணமும், சிவராம கிருஷ்ணன் ரூ.10,65,968/- பணமும், செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் தாங்கள் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கவியரசு மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன்,IPS அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தபட்ட நபர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும், கவியரசு என்பவரது மொத்தத் தொகையான ரூ.3,74,400/- மீட்கப்பட்டது.78

அதேபோல் சிவராம கிருஷ்ணன் என்பவரது பணம் ரூ.5,63,118/– மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட ரூ.9,37,518/- பணத்திற்கான காசோலைகளை (27.09.2023)மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இருவரிடமும் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற இருவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்IPS அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.