கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 338 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் காவல்துறையினர் அதிரடி.

கோவை மாவட்டம்அன்னூர் பகுதியில் 338 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் காவல்துறையினர் அதிரடி.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.K.கார்த்திகேயன், IPS அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதன் அடிப்படையில் (27.08.2024) அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அன்னூர் நிலைய காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான தர்மராஜா கோவில் தெரு அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக நான்கு சக்கர வாகனத்தில் வைத்திருந்த கோவை மீனம்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் பார்த்திபன்(35) மற்றும் துடியலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலசுப்பிரமணியம் (28) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 2,50,000/- மதிப்புள்ள 338 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

நிருபர்.P.நடராஜ்.

Leave A Reply

Your email address will not be published.