கோவைமாவட்டம் வீடுபுகுந்து நகைதிருடிய திருடன்கைது காவல்துறையினர்அதிரடி.
கோவை மாவட்டம்சூலூர் காவல் நிலைய பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி (30) என்பவர் வீட்டை பூட்டி விட்டு அவரது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10, சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர் திருடி சென்றது தெரியவந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP.Dr.K.கார்த்திகேயன்,IPS. அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர புலன்விசாரணையில் கோவை,காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் செந்தில்குமார் @ பால்கார செந்தில்(54) மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து மேற்படி வழக்கில் திருட்டுச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டும் மற்றும் நெகமம் காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் தொடர்புடைய *இருசக்கர வாகனம்-1 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்,மேற்படிகுற்றவாளி பெரியநாயக்கன்பாளையம், சூலூர், போத்தனூர், சிங்காநல்லூர் மற்றும் அவிநாசி பாளையம் காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் மேற்படி எதிரியை காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்Dr.K.கார்த்திகேயன்,IPS. அவர்கள் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
நிருபர்.P.நடராஜ்.